Thursday, 20 November 2025

ஓவியர் மாயா

அ ந்த இளைஞருக்கு வயது தொண்ணூற்று ஆறு. ஆமாம். பதினேழு வயதில் பத்திரிகைகளில் ஓவியம் வரையத் தொடங்கி, இன்று தொண்ணூற்றாறு வயதிலும் நான் வரையத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லும் ஓவியர் மாயாவை இளைஞர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தொண்ணூறுகளில் வந்த பத்திரிகைகளில் இவர் கைவண்ணத்தில் தோன்றிய ஒளியப் பெண்களைப் பார்த்து காதல்கொண்டு கனவுகண்டு ஏங்கிய இளைஞர்கள் எத்தனை எத்தனையோ பேர் குமுதத்தில் ஜெயலலிதா எழுதிய தொடருக்கு இவர் வரைந்த ஓவியங்கள் ஜெயலலிதாவாலேயே பாராட்டப்பட்ட மாஸ்டர் பீஸ் இந்த வயதிலும் துறுதுறு என்று தூரிகையைத் தூக்கக் காத்திருக்கும் மாயாவை, மாலை. வேளை ஒன்றில் சந்தித்தோம்.

நீங்க பிறந்தது எங்கே? உங்க ஓவியங்கள் பிறந்தது எப்போ?

1927 ம் வருஷம், திருநெல்வேலியில பிறந்தவன் நான். அப்பா அம்மா எனக்கு வெச்ச பேரு மகாதேவன். எங்க அப்பாவுக்கு பிரிட்டிஷ் கவர்மெண்ட்ல சர்வேயர் வேலை. அம்மா குடும்பத் தலைவி அப்பாவோட பணி காரணமா, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னைன்னு மாறிகிட்டே இருந்ததால், எங்க வாழ்க்கையும் படிப்பும் இப்படி வெவ் வேறு இடங்கள்ல மாறிமாறிதான் நிகழ்ந்துச்சு.

ஸ்கூல்ல படிக்கற சமயத்துலயே நல்லா படம் வரைவேன். இந்தத் திறமை எனக்கு எப்படி வந்துச்சுன்னு தெரியலை.
அதேசமயம், அந்தக் காலத்துல சினிமா போஸ்டருக்கான படங்களை பிரின்ட் செய்யறதுக்காக மெட்டல் ப்ளேட்ல் என்க்ரேவிங் செய்வாங்க, அதை நான் வேடிக்கை பார்க்கறது. உண்டு. அதனாலகூட எனக்கு வரையறதுல இன்ட்ரஸ்ட் வந்திருக்கலாம்னு தோணுது.

-

ஸ்கூல் டைம்ல நண்பர்கள் தங்களோட ரெக்கார்ட் நோட்புக்ஸ்லயும் சில ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சிக்கான - நோட்டுகள் லயும் வரைஞ்சுதரச் சொல் வாங்க, அப்படி வரைஞ்சு கொடுத்தா. காலணா, அரையணா கொடுப்பாங்க. அல்லது தின்பண்டம் ஏதாவது வாங்கித் தருவாங்க ஏழ்மையான குடும்பம் என்பதால, படம் வரைஞ்சா ஏதாவது கிடைக்கும் என்ற ஆர்வமே என்னை நிறைய வரையத் தூண்டிச்சு.

எஸ்.எஸ்.எல்.சியில் ஒரு மார்க்ல தேர்ச்சியைத் தவறவிட்டுட்டு வருந்திகிட்டு இருந்த சமயத்துல, 'பிக்சர் 'பிக் போஸ்ட் அப்படிங்கற சினிமா பத்திரிகைல படம் வரையக் கூப்பிட்டாங்க. அப்படித்தான் என்னோட பத்திரிகை ஒவிய ஜனனம் நிகழ்ந்துச்சு!"

மகாதேவன் மாயாவாக மாறினது, எப்போ?

'சினிமா பத்திரிகைல வரைஞ்சுகிட்டிருந்த எனக்கு, வாரப்பத்திரிகை ஒண்ணுல நிரந்தரப் பணி கிடைச்சுது. அப்போ ஓவியத்துக்குக் கீழே மகாதேவன்னு நான் போட்ட கையெழுத்து ரொம்ப பெரிசா இருக்கறதால மாற்றிக்கச்சொன்னாங்க தேவன்னு போடலாம்னு நினைச்சேன். ஆனா, தேவன் என்கிற பெயர்ல ஓர் எழுத்தாளரும் இருந்ததால், என்ன செய்யலாம்னு யோசிச்சேன். என் மனைவியோட ஊரான கங்கைகொண்டான்ல மகாதேவன்கிற என் பெயரை மாயான்னுதான் பலரும் கூப்பிடுவாங்க அதனால், மகாதேவன் மாயாவா மாறினேன்!"

உங்க ஓவியங்கள்ல இடம்பெறும் பெண்கள் தத்ரூபமா இருக்காங்களே... அதுக்கான மாடல்கள் யார்?

"இந்த சந்தேகம் அந்தக் காலத்துலயே பலருக்கும் இருந்துச்சு. நான் எங்கோ பார்த்த பெண்ணை அல்லது மாடலைத்தான் வரையறதா நினைச்சுகிட்டு அந்தப் பெண் எங்கே இருக்காங்க, என் மகனுக்குப் பெண் பார்க்கணும்னு கேட்டவங்கள்லாம் உண்டு. என் மகனோட ஃப்ரெண்ட் ஒருத்தன், என் ஓவியம் ஒண்ணைக் காட்டி 'உங்க அப்பாகிட்டே இந்தப் பெண் யார்னு கேட்டுச் சொல்லு. இவளைத்தான் நான் கல்யாணம்பண்ணிக்க ஆசைப்படறேன்'னு சொல்லியிருக்கான் இதை என் மகன் என்கிட்டே சொல்லி சொல்லி சிரிச்சான்! உண்மையிலேயே என் ஓவியப் பாவைகளை நான் கற்பனையில் மட்டும்தான் பார்த்திருக்கேனே ஒழிய நேரில் பார்த்ததே இல்லை 

உங்களால மறக்க முடியாத ஓவியம்?

"நான் பணிபுரிஞ்ச வார இதழ்லேர்ந்து விலகியதும். ஃப்ரீலான்ஸா எல்லா பத்திரிகைகளுக்கும் வரைஞ்சேன் அப்போ குமுதத்துக்கும் நிறைய வரைஞ்சிருக்கேன் குமுதத்துல ஜெயலலிதா எழுதின தொடருக்கு நான் வரைஞ்ச படங்களை ஜெய லலிதாவே பாராட்டினது மறக்க முடியாத விஷயம்!"

திடீர்னு பத்திரிகைகள்ல வரையறதை நிறுத்திட்டீங்க. நீண்ட இடைவெளிக்கு அப்புறம் வெட்டிங் கார்ட்ஸ்ல வரைய ஆரம்பிச்சீங்க, இடைப்பட்ட காலத்துல என்ன ஆச்சு?

ஒரு சமயம், என் மனைவியோட பார்வையைப் பரிசோதிக்கறதுக்காக மருத்துவமனைக்கு கூட்டி கிட்டுப் போனேன். அந்த சமயத்துல என் மனைவி. எதுக்கும் நீங்களும் பரிசோ தனை செய்துக்குங்கன்னு சொன்னாங்க அப்போதான் நடந்துச்சு அந்த விபரீதம் என்கண்களைப் பரிசோதிச்ச டாக்டர்கள் கண்ணுல ஏதோ பிரச்னை இருக்கறதாகவும், உற்றுப் பார்த்துப் படம் வரையறதை நான் உடனடியா நிறுத்தலைன்னா, ஆறே மாதத்துல என் பார்வை முழுமையா பறிபோயிடும்னும் சொல்லிட்டாங்க அவ்வளவுதான், மனைவி, மகன் மகள்கள் மருமகள் பேரன்னு என் குடும்பமே பதறிட்டாங்க நான் எவ்வளவோ சொல்லியும் என்னை வரைய கூடாதுன்னுதடுத்துட்டாங்க வேற வழியில்லாம எல்லா பத்திரிகைகளுக்கும் என் ல் கண் பிரச்னையையும், இனிமே நான் படம் வரைய மாட்டேன்னும் விளக்கமா கடிதம் எழுதிட்டேன் அதனால எனக்குப் படம் வரையும் வாய்ப்புகள் அதன் பிறகு வரலை


கிட்டத்தட்ட பத்துவருஷம் எப்படியோ வரையாம இருந்துட்டேன். ஆனா அதுக்கு மேல - முடியலை. அதனால், என்னால சும்மா இருக்க கல்யாணப் பத்திரிகைகளுக்கு டிசைனிங்காவது பண்ணலாம்னு நினைச்சேன் அப்படி என் 72 வயசுல தொடங்கினதுதான். மாயா வெட்டிங் கார்ட்ஸ் அதுலயும் எத்தனையோ வித்தியாசமான அனுபவங்கள்

அதில் ஏதாவது சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லுங்களேன்?

வெட்டிங்
கார்டு ஓர்க் ஆரம்பிச்சதும்
பலரும் தங்களோட திருமணத்துக்கான அழைப்பிதழ்ல எந்த மாதிரி படம் வேணும்னு சொல்லி வரைஞ்சுதரச் சொல்வாங்க.அப்படித் தன் அப்பாவோட வந்த ஒரு பொண்ணு, ஒரு பல்லக்குல வந்து இறங்கற தன்னை. குதிரைல தயாரா காத்துகிட்டு இருக்கற மணமகன் கரம்பிடிச்சு கூட்டிக்கிட்டுப் போகற மாதிரி படம் வேணும்னு கேட்டாள். நான் அதை வரைஞ்சு வைச்சுட்டேன். ஆனா, பதினைஞ்சு வருஷம் ஆச்சு, இன்னும் அவள் வந்து அதை வாங்கிட்டுப் போகவே இல்லை. (சிரித்தபடியே அந்த ஓவியத்தைக் காட்டுகிறார், மாயா)

என் நண்பர் போயிருந்த ஒரு கல்யாணத்துல வெட்டிங் கார்டுல, காசியாத்திரை, மாலை மாத்திக்கறது, ஊஞ்சல், இப்படி நான் வரைஞ்சிருந்த சம்பிரதாயங்கள் எல்லாம் வரிசையா நடத்தப்படுதான்னு சரிபார்த்து ஒருத்தர் டிக் பண்ணிகிட்டு இருந்ததை ஆச்சரியமா பார்த்துட்டு வந்து என்கிட்டே சொன்னார். வெட்டிங் கார்டை வாங்க வர்றவங்க.
என்னையும் என் மனைவியையும் நமஸ்காரம் செய்துட்டு வாங்கிட்டுப் போனதெல்லாம். நெகிழ்வான விஷயம்! அதுக்கப்புறம் 2021 ல கொரோனா வந்த சமயத்துல வெட்டிங் கார்ட் ஓர்க்கை நிறுத்திட்டு, அது சார்ந்த எல்லாத்தையும் உறுதுணையா இருந்த ஓர்க்கர்ஸுக்கே கொடுத்துட்டேன்"

உங்க மனைவியைப் பற்றி...

"எனக்கு இருபது வயசுல கல்யாணம் ஆச்சு. இந்த வயசு வரைக் கும் நான் தெம்பா இருக்கேன்னா, அதுக்கு என் மனைவி ராஜலக்ஷ்மி கொடுத்த ஊக்கமும் உணர்வும்கூட ஒரு காரணம் இன்றைக்கு இருக்கற ஸ்ப்ரே கன் மாதிரியான உபகரணங்கள் இல்லாத அந்தக் காலத்துலயே நான் ஸ்ப்ரே பெயிண்டிங் எல்லாம் வரைஞ் சிருக்கேன்னா அது, அவள் செய்த உதவிதான் ஆமாம் காற்றை ப்ளோ பண்ண கம்ப்ரஸர் எல்லாம் அப்போ கிடையாது துருத்தி மாதிரி ஒரு பம்பை காலால் தொடர்ந்து அழுத்தணும். நான் வரைஞ்சு முடிக்கற வரைக்கும் என் மனைவிதான் அந்தப் பம்பை காலால் மிதிச்சு இயக்குவாள். எனக்கு ஒரு மகன், மூணு மகள்கள். அவங்களை எல்லாம் வளர்த்தது, படிக்க வைச்சது எல்லாமே அவள்தான் என்கிட்டே எதுவுமே கேட் டறியாத அவளுக்காக நான் செய்தது ஒண்ணே ஒண்ணு தான் அவளுக்குப் பிரியமான பாடகர் ஜேசுதாஸை ஓவியமா வரைஞ்சு, அவளோட அவரைப் பார்க்கப்போனதும். அந்த ஓவியத்துல அவர் கையெழுத்தை வாங்கிக் கொடுத்ததும்தான்.

20 வருடங்களுக்கு முன்னால் அவளை இழந் தது எனக்குப் பெரும் சோகம். ஆனாலும் மகன். மருமகள், பேரன், கொள்ளுப் பேரன்கள்னு எல்லாரும் என்மேல காட்டற அன் பாலும் பாசத்தாலும் இந்த வயசுலயும் நான் தெம்பாகவே இருக்கேன். 2010ல வந்த வெள்ளம் வீட்டுக்குள்ளே புகுந்ததுல என்னோட ஓவியங்கள் எல்லாம் சேதமடைஞ்சுடுச்சு. ஆனா, அதுக்காக நான் வருத்தப்படலை. ஏன்னா, ஆண்டவன் அனுகிரஹத்துல இப்போ வரைக்கும் என் பார்வையும் நல்லாவே இருக்கு. நானும் வரையறதுக்குத் தயாராகவே இருக்கேன்!”

நன்றி குமுதம் தீராநதி 
மே 2023

No comments:

Post a Comment