20 ஆண்டுகளுக்கு முன் புளியங்குடியில் ஒரு ரோட்டரி கிளப் நிகழ்ச்சியில் சந்தித்து உங்களிடம் பேச வேண்டும் என்று கூறினேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் தனியாக நேரம் ஒதுக்கி என்னிடம் பேசினார் என்றார்.
நான் பேசாமல் சென்று விடுவாரோ என்று தயக்கத்திலே நின்றேன்.
அதை பார்த்து.... கண்டிப்பாக உங்களிடம் பேசுகிறேன் தம்பி என்றார் 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி எனக்கு தொழில் முனைவில் உள்ள சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைத்தார்.
நான் அவரிடம் கேட்ட கேள்வி பதிலை ஒரு சிறிய இதழுக்கு அனுப்பி வைத்தேன் அது அதில் பிரசுரமானது அதை அவருக்கும் அனுப்பி வைத்தேன் மிக்க மகிழ்வோடு பதில் கடிதம் அனுப்பி வைத்தார்
இதற்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து அண்ணாச்சியின் அங்கம் வகித்த jci அமைப்பில் நானும் சேர்ந்தேன் அதன் தலைவராக 2019 எனது ஊரில் பணி செய்தேன் .
ஒருமுறை மதுரையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் தனியாக அவரிடம் சந்தித்து மீண்டும் நாம் சந்தித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் மிக்க மகிழ்ந்தார்.
மூன்று முறை எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது மூன்று முறையும் நான் அவரிடம் கேட்ட கேள்வி தற்போது என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தான் சிறிதும் தயங்காமல் ஏதோ ஒரு ஆங்கில நூலையும் இல்லாதது தமிழில் உள்ள தன்னம்பிக்கை தரும் ஏதோ ஒரு பாடலையும் பகிர்ந்து கொள்வார்.
பல இளம் தொழில் முனைவோர்களையும் ஒரு தொழிலை எப்படி நேர்த்தியாக நடத்துவது என்பது பற்றியும் இவரது காணொளிகள் நிறைய காணக் கிடைக்கின்றன.
அவை காலத்தின் அழியாத ஒரு சிறந்த செல்வமாகும் அன்னாரின் நினைவை போற்றுவோம் அவரின் வழியை தொடர்வோம் இறைவனின் நிலையில் உங்களது ஆன்மா சாந்தி அடையட்டும் ஐயா
JC.ஜெயராம்
No comments:
Post a Comment