Wednesday, 3 December 2025

ஏவிஎம் சரவணன்




திரு. ஏவிஎம் சரவணன் அவர்கள் காலமானார் 04-12-2025 என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இவர் எழுதிய வாழ்வியல் நூல் முயற்சி திருவினையாக்கும்.
இதில் ஏவிஎம் நிறுவனம் வந்த பாதை கடந்த சோதனை மற்றும் பெற்ற வெற்றிகள் என்று பலவற்றை எழுதியுள்ளார்.

மிக சிறந்த பண்பாளர்.

இன்றைய சொல் வழக்கில் உள்ள பிரதர் என்ற வார்த்தையை அன்றே பயன்படுத்தியவர்.

மூன்று மாநில முதல்வர்களை இயக்கிய பெருமை இவர்களை சாரும்.
எம்ஜிஆர் முதல்வரான போது நான்கு மணி நேரம் வரிசையில் நின்று வாழ்த்து சொன்னார். இதை கண்ட எம்ஜிஆர் மறுநாள் காலையில் வீட்டிற்கு அழைத்து கடிந்து கொண்டார்.

நீங்கள் எனக்கு சம்பளம் தந்த முதலாளி என்று வாஞ்சையுடன் பகிர்ந்து கொண்டார்.

திருவண்ணாமலை ஈசன் நிழலில் ஆன்மா இளைப்பாறுதல் பெறட்டும்.

அருணாசல சிவ.

No comments:

Post a Comment